search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேட்டூர் அணை தண்ணீர் திறப்பு"

    மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் திறப்பு இன்று காலை முதல் 2 ஆயிரத்து 500 கன அடியாக குறைக்கப்பட்டது.
    மேட்டூர்:

    மேட்டூர் அணைக்கு நேற்று 84 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 56 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் திறப்பு இன்று காலை முதல் 2 ஆயிரத்து 500 கன அடியாக குறைக்கப்பட்டது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    கடந்த 13-ந் தேதி 50.61 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 50.11 அடியாக சரிந்தது. இன்று நீர்மட்டம் மேலும் சரிந்து 49.80 அடியாக இருந்தது. இதனால் கடந்த 2 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் சுமார் ஒரு அடி சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாமல் இதே நிலை நீடித்தால் இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.
    காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை முதல் 16 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. #MetturDam
    மேட்டூர்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு கடந்த 7 மாதமாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று 1,005 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று அதிகரித்து 1,095 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 12 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரும், கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வந்தது.

    இன்று காலை முதல் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 16 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    கடந்த 15-ந் தேதி 100 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து நேற்று 97.53 அடியாக இருந்தது. இன்று மேலும் ஒரு அடி சரிந்து 96.56 அடியாக இருந்தது. இதனால் கடந்த 4 நாட்களில் மட்டும் 3.5 அடி நீர்மட்டம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்காத பட்சத்தில் நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது. #MetturDam
    மேட்டூர் அணைக்கு நேற்று 6 ஆயிரத்து 12 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் குறைந்து 6 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. #MetturDam
    சேலம்:

    கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக கனமழை பெய்தது.

    இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதால் அந்த அணைகளில் இருந்து உபரி நீர் அதிக அளவில் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதனால் நடப்பாண்டில் மேட்டூர் அணை 4 முறை நிரம்பியது. அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 2 லட்சம் கன அடிக்கும் அதிகமாக உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதற்கிடையே கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அங்குள்ள அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது.

    இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்ததால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பும் குறைக்கப்பட்டது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 6 ஆயிரத்து 12 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் குறைந்து 6 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 6 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் நேற்றிரவு முதல் தண்ணீர் திறப்பு 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 119.6 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளது. #MetturDam
    மேட்டூர் அணையில் இருந்து 14ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 6ஆயிரத்து 800 கனஅடியாக குறைக்கப்பட்டது. #MetturDam
    மேட்டூர்:

    கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. இதனால் அந்த அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பும் படிப்படியாக குறைக்கப்பட்டது.

    கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து இன்று காலை 2ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் மட்டுமே காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து உள்ளது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 15ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 8ஆயிரத்து 500 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து 14ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று தண்ணீர் திறப்பு 6ஆயிரத்து 800 கனஅடியாக குறைக்கப்பட்டது. இனிவரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் சரிய வாய்ப்பு உள்ளது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 13ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 10ஆயிரம் கனஅடியாக குறைந்தது. ஒகனேக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    ஒகேனக்கல்லில் மெயின் அருவி சேதம் அடைந்திருப்பதாக கூறி, அதில் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மற்ற அருவிகளிலும், காவிரி கரையோரங்களிலும் சுற்றுலா பயணிகள் குளித்து வருகிறார்கள்.

    வழக்கமான பாதையில் பரிசல் இயக்கப்படுகிறது. இதனால் உற்சாகமாக சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி சென்று மகிழ்ந்தனர். #MetturDam
    ×